வாழ்

எதிர்காலம் எப்படி இருக்கும் என
அஞ்சும் மூட மனிதா
உயிர் இருக்கும் இந்த நோடியின்
அருமை புரியவில்லையா?
வீடு வேண்டும், வசதி வேண்டும் என
வாழ்வை தொலைக்கும் மனிதா
மனம் அமர இயற்கையை ரசித்தது உண்டா?
மழைச்சாரலை உன் மேல்
தெளிக்க அனுமதித்து பார்.
அதன் சிலிர்ப்பை உணர்ந்து பார்.
காலையில் உதிக்கும்
செந்நிற சூரியனை
வானம் எங்கும் படரும் சிவப்பை பார்.
கண்ணில் குளிர்ச்சியை தரும்
வண்ண பூக்களை பார்
விடியும் பொழுதே
உனக்கு கொடுத்த வரம்.
இன்னும் புலராத பல வருடங்களை
எண்ணி தேயும் மனிதா
எதிர்காலம் போல நிகழ்காலம் கூட
உயிர்ப்பானது தான்
இன்றில் இருந்தே வாழ்.

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:46 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : vaal
பார்வை : 159

மேலே