காட்சிதிரை

உடலை தாங்கும் பூமிதாயே
மனதை தாங்க வாராயோ
உயிர் ஓரமாய் ஊடலாட
உடல் பாரமாய் இருக்க
அசையும் விழிகள்
காட்சிகளை திரை விரிக்கிறது.
சண்டைகள் , கோபங்கள்
மன்னிப்புகள் , ஆறுதல்கள்
வாழ்வின் இன்பங்களை, துன்பங்களை
கொடுத்த கனவு
கலையாமல் இருந்தால் என்ன?

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:30 am)
சேர்த்தது : நிலவன்
பார்வை : 497

மேலே