புத்தகம்

அறிவுச் செய்திகளை
தன்னுள் வைத்து
அடக்கமாய் நின்று
தன்னை தேடுபவனுக்கு
நண்பனாகவும்
நண்பனின் வெற்றிக்கு
தூண்டுகோலாக வரும்
எதிரிகளை வீழ்த்த
ஏற்ற ஆயுதமாகவும்
வளமான வாழ்க்கைக்கு
வரிகளை சுமந்தும்
கணமாக இருந்தாலும்
தலைக்கனம் இன்றி
நம்பி வந்தவர்க்கு
நம்பிக்கையை தந்து
தன்னை தேடாதவனுக்கும்
கேள்வியறிவாய் புத்தியை தீட்டுவது.


அத்தகைய நண்பனை
அறியாமல் விட்டவனே
அறியாமையால் சிதைகிறான்
வாழ்க்கையில்.........

எழுதியவர் : இராசு (1-Dec-22, 12:37 pm)
சேர்த்தது : இராசு
Tanglish : puththagam
பார்வை : 43

மேலே