வாததேகிகட்கு வற்றல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுண்டைக்காய் பேய்ப்புடற்காய் தூதுளங்காய் நெல்லிக்காய்
தொண்டைமணத் தக்காளி தூஅவரை - பண்டைமுள்ளிக்
காயிவையின் வற்ற(ல்)களுங் காண்புரண்டை வற்றலுமாம்
வாயுதே கர்க்கறிந்து வை!

- பதார்த்த குண சிந்தாமணி

சுண்டை, பேய்ப்புடல், தூதுகளம், நெல்லி, ஆதொண்டை, மணித்தக்காளி, வெள்ளவரை, முள்ளி, காட்டுப் பிரண்டை இவற்றின் வற்றல் வாத உடலினர்க்குச் சிறந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 7:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே