அறிவின் திறவுகோல்
அறியாமை இருளை
அகற்றவும்
அகத்தின் தெளிவின்மையை
ஆராயவும்
ஆளுமைப் பண்புகளை
அதிகப்படுத்தவும்
சான்றோர்கள் போற்றும்
சான்றோர்களாக
மாயை என்னும்
மாயத்தால்
பூட்டப்பட்டிருக்கும்
அறிவுப்பூட்டைத் திறக்கும்
திறவுகோலாக விளங்கும்
புத்தகத்தை கையிலெடு....
புத்தக வாசிப்பே
புதுமையான உலகை
படைக்க முடியும்.