அறிவின் திறவுகோல்

அறியாமை இருளை
அகற்றவும்

அகத்தின் தெளிவின்மையை
ஆராயவும்

ஆளுமைப் பண்புகளை
அதிகப்படுத்தவும்

சான்றோர்கள் போற்றும்
சான்றோர்களாக

மாயை என்னும்
மாயத்தால்
பூட்டப்பட்டிருக்கும்
அறிவுப்பூட்டைத் திறக்கும்
திறவுகோலாக விளங்கும்
புத்தகத்தை கையிலெடு....

புத்தக வாசிப்பே
புதுமையான உலகை
படைக்க முடியும்.

எழுதியவர் : இராசு (12-Dec-22, 10:09 pm)
சேர்த்தது : இராசு
Tanglish : arivean thiravukol
பார்வை : 94

மேலே