சிந்துது செந்தமிழைச் சேர்த்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)

நந்தவனப் பூக்கள் நடனஞ்செய் வேளையதில்
அந்திவான நீலத்தில் ஆனந்தம் - வந்ததெனச்
சிந்தை வெளியில் சிறகடிக்கும் உன்நினைவு
சிந்துது செந்தமிழைச் சேர்த்து!

- வ.க.கன்னியப்பன்

கருத்து உதவி: திரு கவின் சாரலன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Dec-22, 11:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே