சிந்துது செந்தமிழைச் சேர்த்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)
நந்தவனப் பூக்கள் நடனஞ்செய் வேளையதில்
அந்திவான நீலத்தில் ஆனந்தம் - வந்ததெனச்
சிந்தை வெளியில் சிறகடிக்கும் உன்நினைவு
சிந்துது செந்தமிழைச் சேர்த்து!
- வ.க.கன்னியப்பன்
கருத்து உதவி: திரு கவின் சாரலன்