கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்
அந்தி வேளையில் வானத்தில் உதித்தது ஒரு நட்சத்திரம்
ஆவின் கொட்டிலில் அழகு நிலவொன்று கண் விழித்தது
இன்னல்களை களைந்து இன்பமாக்க பிறந்த அந்த மகவு
ஈன்றவளை கொட்டிலில் சிரித்து மகிழ வைத்த அப்பிறவி
உலகம் உய்வடைய வேண்டி அவதரித்த மகான் என்றறிந்து
ஊரெல்லாம் பாராட்டி வணங்கி உற்சாகமாக கொண்டாடி
எங்கும் அமைதியும் அறமும் தழைத்திட வந்த பரமபிதா
ஏழைகளை உயர்விக்க வேண்டி கடமையோடு பணியாற்ற
ஐயங்களை களைந்து அவரை சரணம் அடைந்தனர் உலகத்தோர்
ஒப்பில்லாத அவர் கூறிய ஞான உபதேசங்களை கட்டளையாக்கி
ஓதிய பல பாமரர்கள் அடைந்த பலன்கள் பெருகிட அதைக் கண்டு
உலகமனைத்தும் அவரின் புகழ் பாடி வாழ்வில் உயர்வடைந்ததுவே
அன்னாரின் பிறந்த தினம் கிறிஸ்துமஸ் என அறிவோம்