நான் ஏன் கவிதை எழுதுகிறேன்

இதுவரை
யாருமே கேட்டதில்லை -
நீயேன் எழுதுகிறாய் என.

இதுவரை
மொட்டவிழ்க்காத முடிச்சுக்களால்
நானாகவும் சொன்னதில்லை.

எண்ணிப் பார்க்கின்றேன்;
எத்தனையோ காரணங்கள்.

எழுதியவை கவிதையென
எண்ணவைப்பது எளிதாக இருக்கிறது. .

ஆடுகளம் எதுவாயினும்
அமர்க்களமாய் இருக்கிறது.

சிக்கனத்திற்குத் தக்கன
சீக்கிரமாய் ஆகிவிடுகிறது.

கை வலிப்பதில்லை;
மண்டைக் காய்வதில்லை.

காரசார விமர்சனங்களிடம்
கடிப்பட்டு காயமடைவதில்லை

கவிதைகளால் தளும்பியே
கடலாகியிருப்பதால்...

கவலைகளுக்குத் தேவைப்படுவதில்லை,
கண்ட கண்ட திரவங்கள்!

இன்னும் அடுக்கலாம் தானெனினும்
அடக்கிக்கொள்கிறேன்...

வினவாத கேள்விக்கு
வியாக்கியானம் போதுமென!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (23-Dec-22, 7:03 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 318

மேலே