தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப் போக்குற்ற போழ்தில் புறனழீஇ - பழமொழி நானூறு 250

இன்னிசை வெண்பா

தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப்
போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண்
நோக்கற் றவரைப் பழித்தலென்? என்னானும்
மூக்கற்ற தற்கில் பழி. 250

- பழமொழி நானூறு

பொருளுரை:

எப்படி ஆயினும், மூக்கு அறுபட்டதற்குப் பழிப்பு இல்லை; அதுபோல, ஒருவரைத் தலைப்பட்ட பொழுது தம் உறவினரைப்போல் அன்புடன் நன்றாகப் புகழ்ந்துரைத்து அவர் நீங்கிய இடத்து புறம் பேசுபவர்களைப் பற்றி அழித்துப் பேசுபவரால் மேன்மைக் குணத்தின்கண் கருத்து இல்லாதவர்களை இகழ்ந்துரைத்தல் ஏன்?

கருத்து: புறங்கூறுவார் என்றும் திருந்தார்.

விளக்கம்:

மூக்கற்றதற்குப் பழிப்பில்லாதது போல், மேன்மைக்கண் நோக்கமில்லாதவர்களிடம் புறங்கூற வேண்டா என்று இகழ்ந்துரைத்தலிற் பயனில்லை.

'மூக்கற்ற தற்கில் பழி' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-23, 2:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே