உலகும் உன்னை மதிக்கும்
தான் மட்டும் வாழ
தவறு செய்து விட்டு
தண்டித்துக் கொள்வது போல்
தன்னையே நிந்திப்பது
தரந்தாழ்ந்த செயல்
அதற்கு பதிலாக
ஒருவருக்கும் தீங்கிழைக்காமல்
உனக்கே நீ நல்லவனாக
வாழ்ந்திருந்தால்
உன் மனமும் நிறைவு பெறும்
உலகும் உன்னை மதிக்கும்