படைத்தவன்
படைப்பென்று ஒன்று இல்லாமல் அவனியில்
படைக்கப் படுவதில்லை எதுவுமே இதையறிந்தால்
படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் அவனே
'உலகம் யாவையும் ஆக்கல் காத்தல் பின்னர்
அத்தனையும் அழித்து ' தன்வயிற்றில் அடக்கி
ஊழியில் ஒரு பாலகனாய் ஆலிலையில்
மிதந்துவரும் மாயவனும் ஆவான் என்பதன்
ரகசியமும் தெளியும் மனதிற்கு அதனால்
நாமெல்லாம் என்றுமே அந்த படைத்தனின்
'சொத்தாவோம்' அவனுக்கு அவனையே அடையும்
அடிமைகள் நாம் அறிவோம்