கவிதைமேல் மோகம்

நேரிசை வெண்பா


கொம்புத்தேன் வேண்டியே கொம்பூன் முடவனுக்கு
எம்புட்டு ஆசைமரம் ஏறானே -- வம்பென
யாப்பறியான் கம்பன் தான் யானு மெனக்கூறி
பாப்புனைதல் ஆகுமோ பாரு

யாப்பிலக்கண வகை ஒன்றுக்கும் அறியாது பாவினம் பாவினம்
என்று பலதையும் எழுதி தைரியமாக இது கலி விருத்தம் இது கலித்துறை ,வெண்பா வென இனியும் கூறவேண்டாம். ஒரு மாதமாவது இலக்கணம் படித்து அதைக் கற்று தைரியமாக எழுதுங்கள் .. வீணாகத் தொடர்ந்து அந்தப்பா இந்தப்பா என்று எழுதி இருப்பவரை குழப்ப வேண்டாம்.

எழுதியவர் : பழனி ராஜன் (26-Jan-23, 11:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே