காதலில் இவ்வாறு ஏமாறுவார்கள் மனிதர்கள்

கொம்புத்தேன் கிடைக்காதா என்று ஏக்கத்தில் முடவன்

கொம்பொருத்தி கோரோரிக்கையற்று வேரில் பழுத்த பலாவைப் பார்த்து

கொய்யாரோ யாரேனும் தொங்கும் கொய்யாத் தேன் கொய்யாவை இங்கே

நரிக்கோ தொங்கும் தேன் திராட்சை சீ சீ ...இந்தப் பழம் புளிக்கும் ----எட்டாது

சிவந்த இலவம் பஞ்சை பழம் என ஏமாறும் கிளிகள்

கானலை நீரென்று ஏமாந்து கால் கடுக்கத் தொடரும் மான்கள்

காதலில் இவ்வாறு ஏமாறுவார்கள் மனிதர்கள் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-23, 4:02 pm)
பார்வை : 164

மேலே