போக்காளன்

பூட்டிய கடையின் வாசலில்
உறங்க முயற்சிக்கிறான் எம்போகி

கொசுவோடு சேர்ந்து
கடிக்கிறது மழை

தலைக்கும் காலுக்குமாய் இழுபடுகிறது அழுக்குச் சாரம்.

தூக்கம் வரும் நேரத்தில் எழுப்புகிறான் கடைக்காரன்.

எழுதியவர் : திசை சங்கர் (28-Jan-23, 6:18 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 51

மேலே