291 வறுமை, பாவம், துன்பம் சோம்பலால் பெருகும் - சோம்பல் 4

வஞ்சி விருத்தம்
(காய் விளம் காய்)

மடிசேரு மவர்க்கொரு நாளுமறல்
விடியாத வர்நெ'ஞ்'சிடை வெந்துயரே
குடியாகு மறந்தொடர் குற்றமெலா
நெடிதாக வளர்ந்திடு நிச்சயமே. 4

- சோம்பல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

சோம்பலை உடையவர்க்கு ஒருநாளும் வறுமைப் பிணி நீங்காது. அவர் மனத்தில் கடுந்துன்பம் குடி கொள்ளும். பாவம் சேரும் தீமைகளெல்லாம் பெருமளவு வளர்வது உறுதி” என்கிறார் இப்பாடலாசிரியர்.

மடி - சோம்பல். மறல் - வறுமை. மறம் - பாவம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-23, 7:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே