ஆண்டவனுக்கே
ஆண்டவனுக்கே...
🌹🌹🌹
அந்த காலத்திலே ஓர்
ஆண்டவன் இருந்தாராம்!
அவரது தோட்டத்தின்
நன்மைதீமை அறியும் மரத்தின்
கனியை புசிக்கக் கூடாதெனக்
கட்டளை இட்டாராம் !
அரவத்தின் அறிவுரைப்படி
அம் மரத்துக்
கனி ஒன்றைப் பறித்துப் புசித்த பெண்
அது சுவையானதானதால்
தன்
கணவனுக்கும் கொடுக்க
அவனும் புசித்து மகிழ்கிறான்.
ஆத்திரம் கொண்ட
ஆண்டவன்
அந்த ஒற்றைக் கனியைப்
பறித்தமைக்கே
சாகுமாறு சாபம் இடுகிறார்!
பாவம் அவர் !
மக்களைப் பெற்ற மனிதர்கள்
கோடானு கோடி பழங்களைப்
பறித்துப் பறித்து தின்று
பசியாறுகிறார்கள்!!
திகைத்துத் தடுமாறுகிறார் ஆண்டவன்!!
-யாதுமறியான்.