ஆட்டி விட்டானோ

வலையில் சிக்கி
உயிருக்கு போராடி
வெளிவர துடிக்கும் மீனுக்கும்
வாழ வேண்டுமென்ற
ஆசையைத் தூண்டிவிட்டு
துடிக்கவிட்டதும்—நாம்
தொழுது வணங்கும்
இறைவன் தானே !

மண்ணில் பிறக்க வைத்த
மாயவன் , தன்னை
மறக்காமல் துதிக்கவைத்து
வாழவைத்த மக்களைத்
தூங்க வைக்க
தொட்டிலை ஆட்டியதுபோல்
ஆற்றையும், பூமியையும்
எதியோப்பாவில்
ஆட்டி விட்டானோ !

எழுதியவர் : கோ. கணபதி. (17-Mar-23, 1:10 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 38

மேலே