பெண்ணிலா இவள்

மதுமதி மதி மதி அவள்முகம்
மதுமதி என் நினைவெல்லாம்
நிறைந்து நிற்கும் முழுமதி வெண்மதி
நிலவிற்கு கலைகள் ஈரெட்டு அதனால்
வளர் கலையும் தேய்வும் அதற் குண்டு
மண்ணில் உலாவிவரும் பெண்ணிலா இவளுக்கு
கலையோ ஒன்றே ஒன்று என்றும்
மாறா எழில் பொங்கும் வளர்பிறையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudevan (24-Mar-23, 3:09 pm)
பார்வை : 221

சிறந்த கவிதைகள்

மேலே