நீ இல்லாத தருணங்களில்..!!
நீரில் பூத்த
கோலமாய் சிதைந்து
கிடக்கிறேன்..!!
என்னை வாரி
அனைத்துக் கொள்
மங்கையே..!!
துயரமோ துன்பமோ
உன்னோடு இருக்கையில்
எல்லாம் குறைவே..!!
நித்தமும் சத்தமிடுகிறேன்
நீ இல்லாத தருணங்களில்
வந்துவிடு என்
காதல் தேவதை..!!
யாக்கை மீது
பூக்கும் உப்பு
போல் நீ இல்லாத
தருணங்கள் அசிங்கமாய்
தெரிகிறது எனக்கு..!!