ஆண்டி மடம் கூத்தர் குழுவும்

நல்லூர் என்னும் ஊரிலே மடமும்
இருக்க பிச்சாண்டி பலரும் இரவுண்டி
முடித்து கண்ணயர வருவர் தேடி
யம்மடம் அவரும் வாய்ப்பந்தல் குளமதும்
குளியல் அறையதும் சமைக்க கூடமும்
முடிக்கப் பேசுவர். பொழுது விடிந்ததும்
ஒருவரை யொருவர் கவனியா கிளம்புவர்
பிச்சை காசு வாங்க
பின்விழும் உணவை தின்ன ஓ டுவாரே

ஆண்டிமடம் அமையவில்லை ஒருநாளும் ஆயின்
கூத்தாடி குழுவொன்று அமைத்தது அரசாங்கம்
தமிழர் நாட்டிலோர் குழுகேள் அண்ணா
எம்ஜிஆர் சிவாஜி கண்ண தாசன்
எல்லாமே நடிகர் கூத்தாடி நடத்திய
நாடகம் சோறும் போட்டது
அரசும் தந்தது கோடீஸ்வர குபேரரே

எழுதியவர் : பழனி ராஜன் (31-Mar-23, 10:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 12

மேலே