சிதறல்கள் ஒன்று

சிதறல்கள் ஒன்று

சுட்டெரிக்கும் வெயில்
வேர்வை வழிய
காத்திருக்கிறான்
இளநீர் வியாபாரி

செத்து போன
உருவங்கள்
மக்கள்
விலை பேசி
வாங்கி செல்கிறார்கள்
கடலில் கிடைத்ததோ
மேய்ச்சல் மிருகங்களோ?

விற்கும்
வியாபாரி
வாங்குபவனை வளைக்க
நினைக்கிறான்

வாங்க வந்தவனோ
விற்பவனை
மடக்க பார்க்கிறான்

யார் தோற்றது
விற்றவனா
வாங்கியவனா?

படிப்பு கசந்து
வெளியே வந்தவன்
அவனிடம்
பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்
படித்தவர்கள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Apr-23, 1:01 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : sitharalkal ondru
பார்வை : 28

மேலே