நீங்காத நினைவுகள் ரூபன்

நெஞ்சில் உன் நினைவுகளோடு பதின்மூன்று ஆண்டுகள்
நெஞ்சை பற்றவைத்து பரிதவிக்கவிடும் இனிமை நினைவுகள்
உதிராமல் உறைந்து நின்று கொல்லுதடா ....

ஆயிரம் கனவுகளுடன் கனடாவில் புகுந்தாய்
அயராமல் உழைத்து உறவை காத்தாய்
பண்பாய் பழகி உறவுகளை சேர்த்தாய்
பாசமாய் உறவாடி உரிமை கொண்டாய் ......ரூபா

காலமெல்லாம் எமக்கு கடவுளாய் உயிர் வாழ்ந்து
கனியெல்லாம் தந்துவிடும் - உன் காலம்
விண்ணோடு சென்றுவிட்டாலும்
கண்ணில் இருந்து மறைந்து விடாது

மலர் சூடி போற்றி துதித்து .இறைவனின் இருப்பிடத்தில்
நீ உறைந்து இளைப்பாறவே
இறைவனுடன் இரந்து நிற்கின்றோம்

அன்பான உடன்பிறப்புகள்
(அகிலன்)

எழுதியவர் : கவி அகிலன் ராஜா (22-May-23, 10:39 am)
பார்வை : 23

மேலே