உன்னை என்றும் தொடர்வேன் 555

***உன்னை என்றும் தொடர்வேன் 555 ***


உயிரே...


உன்னை என்றும் நான்
கட்டாய படுத்தவில்லை...

நீ
இப்படி இரு என்று...

உன்மீதான அன்புதான்
உன்னுடன் சண்டையிட காரணம்...

என்னை நீ உதாசீனம்
படுத்தும் ஒவ்வொரு முறை
யும்...

ஏற்று கொள்ளாத
என் இதயம்...

உனக்கு பிடித்த சந்தோசத்தை
நீ சந்தோசமாக வாழ்ந்துகொள்...

உன் சந்தோச
மே
என் சந்தோஷம்தானடி...

சில நேரம் நான்
தடைபோட்டால் மன்னித்துவிடு...

என்மீது நீ எத்தனை
வெறுப்பை காட்டினாலும்...

உன்னை
நான் தொடர்வேன்...

உனக்குள் இருக்கும் என்மீதான
அன்பை நீ வெளிப்படுத்தும்வரை...

இமைபோல் என்னை
நீ காப்பாய் என்று...

உனக்காக நான்
உலகத்தையே மறந்தேன்...

உன் உலகம்
நான் இலையென்று...

உன் கோபத்தில் நான்
உணர்ந்து கொண்டேன்...

இனி என்னை நான்
திருத்திக்கொள்கிறேன்...

என் உயிரில்
கலந்த உறவே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (20-Jun-23, 4:07 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 517

மேலே