எனது ஆலயம்
எனது ஆலயம்
%%%%%%%%%%
மேலக்கலங்கலில் புனிதர் குழந்தை தெரேசாளின் இறைசாட்சி அற்புதங்கள்:
இறைசாட்சி : 4
குழந்தைப் பாக்கியம் அருளிய இறைசாட்சி அற்புதங்கள்..
மேலக்கலங்கலின் புனிதர் குழந்தை தெரேசா அநேமாகான உறவுகளுக்கு அன்னையின் அருட்கொடையால் திருமணமாகி 5 ஆண்டுகள்,10ஆண்டுகள்,15 ஆண்டுகள்யென உடல்நிலை மாற்றத்த்தால் குழந்தைப் பேறு கிடைக்காத சூழ்நிலையில் .
குழந்தைப் பாக்கியத்திற்காக அன்னையிடம் நம்பிக்கையுடன் கண்ணீர் சிந்தி வேண்டி பலன் அடைந்தோர் அநேகமான தம்பதிகள்..
திருமணம் நிகழ்ந்து பல ஆண்டுகளான தம்பதிகளை நான் மருத்துவமனையில் பணி புரிவதால் ..மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்த போது..
எனக்கு குழந்தை இயேசு தெரேசாதான் மருத்துவர் அவளே எனக்கு குழந்தைப் பாக்கியம் தருவாள் என முழுமையாக நம்பிய தம்பதிக்கு ..
ஆம்..வேண்டியவர்களை கைவிடாதா அந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தையை வாரிசகக் கொடுத்தார்கள்..
அன்னையின் அருளால் குழந்தைப் பேறு பெற்றவர்கள் ஒவ்வொறு தம்பதியும்..தன் கைப்படி அற்புத சாட்சியாக கடிதம் எழுதி ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்து அதை ஆலயத்தின் நிர்வாகத்திடம் கொடுத்து அன்னையின் அற்புதங்களை உலகறியச் செய்ய உதவுங்கள்...
இறைசாட்சி : 5
மதம் கடந்து ஊர் கடந்து புனிதர் திரேசாவின் அற்புதங்கள்..
கிழக்கலங்கலில் அமைந்துள்ள அம்மன் கோவில் திருவிழா வழக்கமாக மேலக்கலங்கல் புனிதர் குழந்தை தெரேசா ஆலய திருவிழா முடிந்த அடுத்த வாரமே கொண்டாடுவது ஆண்டு ஆண்டுகாலமாக வழக்கம்..
கிபி 1990 களிலே ஏதோ காரணத்தால் மேலக்கலங்கல் ஆலய திருவிழாவுக்கு முன்பாகவே கீழக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்து...
திருவிழா ஆரம்ப நிகழ்ச்சியாக பொங்கல் சாட்டுதல் அதவாது சாமி உத்தரவு வாங்குதல் என்ற நிகழ்வு நடைபெறும்..அதவாது பெரிய கோவில்களில் கோடிக்கம்பத்தில் கொடியேற்றி திருவிழாவை துவங்குவார்கள்..சில நடுநிலையான கோவில்களிலே கம்பம் சாட்டுதல் என்ற நிகழ்வுக்கு பின்னே திருவிழா துவங்கும்..
கிராமக் கோவில்களில் பொங்கல் சாட்டுதல் என்ற சாமி உத்தரவு நிகழ்வு நடத்துவது வழக்கம்..
கோவில் நிர்வாகி மற்றும் பக்தர்கள் சாட்டுவதற்கு கோவிலுக்கு சென்றபோது.
கோவிலுக்குள் நுழைய விடமால் நாகம் தடுத்ததாககவும்..அதன் பின் சாமியாடி..மேலக்கலங்கலில் என் தங்கை ஊர் (தேர்பபவனி) சுற்றி வந்த பின்னே ..எனக்கு கொடை கொடுங்க என்று சொன்னதாகவும்...
அதன் பின் கோவில் திருவிழவை தள்ளி வைத்து திருவிழாவை நடத்தினார்கள் என்று அன்றைய பெரியவர்கள் கூறினார்கள்
அன்று நடந்த நிகழ்வு..
என்ன அற்புதம்....
தெய்வங்களுக்குள் இல்லாத மதம் , மனிதனே உனக்கு ஏன் மதமேறும் மதம்?
தொடரும்....
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்