திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் - சிவநேச வெண்பா
சிவநேச வெண்பா
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
நேரிசை வெண்பா
ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
என்போல்வார் என்சொல்லார் ஈங்கு! 81
இதுவரை முகநூல் என் பக்கத்தில் வள்ளலாரின் சிவநேச வெண்பாவிலிருந்து 81 நேரிசை வெண்பாக்கள் பதிவு செய்திருக்கிறேன். அருமையான வெண்பாக்கள்; ஒவ்வொன்றிலும் பொழிப்பு மோனையும், பொருளும் மிகச்சிறப்பு.