காதலும் மோதலும் சாதலுக்கல்ல...!

ஒவ்வொரு மணித்துளியும் மரணச் சுவடுகள்! எனில்
எவ்வோரு உயிரும் எதையும் ஒன்றாது எப்படிப் பிழைக்கும்...?

உதடுகள் உதிர்த்த கொடுஞ்சொற்கள் அக்கணம்!, எமது
உதிரங்கள் நிதியின்றி கதியற்று நிலைபெற்று நீட்சம்கொண்டனவே இக்கணம்...!

வலிச்சுமை பெரிதுதான் என்காதல் வழிதனில்!, எனினும்
பலிகொண்டா எமைவெல்லும் வலியுணரா உன்காதல் தன்னகத்தே...!

புரிதலில் பிழையல்ல அறிந்துணர்ந்த எனக்கு!, நான்
எரிதலில் இன்புற ஏனைய நினைவுகளும் எரிமேடை ஏறட்டும்...!

தேவைதான் தொழிலென்றால் சேவையென்று ஏதுமில்லை!,
பாவைதான் ஏதுமென்றால் பரந்துப்பட்ட பேருலகை துறந்துபோனேன் எனக்கொள்...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (29-Aug-23, 4:01 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே