சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை - கலிவிருத்தம் 1

கலிவிருத்தம்
(புளிமா கூவிளங்காய் புளிமாங்கனி கூவிளங்காய்)

பொடியார் மேனியனே புரிநூலொரு
..பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளரங்கையின்
..மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள்
..வீர(ட்)டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை
..நீயலதே! 1

- 028 திருக்கடவூர் வீரட்டம்

பொழிப்புரை:

திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே,

புரியாகிய நூல், ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற் பொருந்தி விளங்க, கூர்மை பொருந்திய முத்தலை வேல் (சூலம்) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே,

திருக்கடவூரினுள், `வீரட்டம்` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே,

என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லது வேறு யார் துணை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-23, 7:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே