ஆனால் மனிதா ஆகையால் மனிதா

ஆனால் மனிதா
ஆகையால் மனிதா
ஆனால் மனிதா ,
ஆகையால் மனிதா,
அட ஆம் மனிதா,
உள்ளே நான், வெளியே நீ;
உள்ளிருந்து செயல்படும் உன் மனசாட்சி நான் ;
வேண்டாததை செய்பவன் நீ;
வெந்து நொந்து போய் கிடப்பவன் நான்;
வேண்டும் என்றே தவறை செய்பவன் நீ;
வேண்டாம் இந்த தவறு என்று வேண்டுபவன் நான்,
வேடம் போடுபவன் நீ;
வேடத்தை கலைக்க நினைப்பவன் நான்;
வெறுப்பில் நீ;
வேதனையில் நான்;
வெறி பிடித்தவன் நீ;
நெறியைத் தேடுபவன் நான்;
வெற்றிக்கு துடிப்பவன் நீ
வாழ தவிப்பவன் நான்;
பொறாமை கொண்டவன் நீ
பொறுமையை கடைபிடிப்பவன் நான்;
பொல்லாதவன் நீ
புலம்புபவன் நான்;
உன் வழி உள் வலி;
உறங்காத விழி உன் விழி;
ஊமையான வலி உள் வலி;
திடமாய் நான்;
திமிராய் நீ;
தேடலில் நீ
தெரியாத சோகத்தில் நான்;
ஆட்டம் ஆர்பாட்டமே நீ;
அமைதியைத் தேடும் ஆன்மா நான்;
ஆசை மோகத்தில் தத்தளிக்கும் நீ;
அது வேண்டாம் என்று தள்ளி நிற்க விரும்பும் நான்;
மோக வலையில் நீ;
மௌன ராகமாய் நான்;
ஆகாததை போகாததை செய்ய விரும்புபவன் நீ;
அடங்கிக் கிடப்பவன் நான்;
சிரித்து சிரித்து மகிழ்கின்றாய்;
சிந்தித்து சிந்தித்து மனம் அமைதியாகின்றேன்;
சிரிக்க மறந்து கதறும் போது
நான் சற்று சினம் தான் கொள்வேன்;
ஆகையால் மனிதா மனிதன் நீ,
ஆனாலும் மணக்கும் மனம் நான்;
அய்யய்யோ அகம் பாவம் பிடித்த மனிதா,
அநியாயத்திற்கு துணைபோவாய் நீ;
அப்பப்பா மனம் நான்,
அகம்பாவம் பிடித்த உனக்குள்ளும் இருந்து, அமைதியை தேட தவிக்கும் மனம் நான்;
கண்ணீரில் கரைபவன் நீ;
காணமல் இரக்கம் காண்பவன் நான்;
கண்டும் காணாமல் போபவன் நீ;
கண்டவுடன் பரிவுகாண்பவன் நான்;
ஆனாலும் மனிதா நீ,
அடம்பிடித்தே சாதிக்க நினைப்பாய்;
அமைதியாய் இருந்தே சாதிக்க துடிப்பேன் நான்;
பசி எடுத்தால் பாய்ந்து துடிப்பாய்;
பசியில் பிறர் துயரையும் பார்ப்பவன் நான்;
பகுத்தறிவு என்ற பெயரில் பாவத்தை செய்பவன் நீ;
பக்குவமாய் நடக்க விரும்புபவன் நான்;
படாடோபத்தை தேடி பட படப்பவன் நீ;
பட்டது போதும் என்று நினைப்பவன் நான்;
பாவத்தை சுமப்பவன் நீ;
பாடுபட்டு திருத்த நினைப்பவன் நான்;
நன்றி மறந்தவன் நீ;
நன்றாய் இருக்க விரும்புபவன் நான்;
நன்றி கெட்டவன் நீ;
நன்றி கடனை தீர்க்க நினைப்பவன் நான்;
அன்பை தொலைத்துவிட்டு கதறுபவன் நீ;
அன்பே ஆதாரம் அறம் என்று நினைப்பவன் நான்;
சுகம் தேடும் சுயநலவாதி நீ;
சும்மா இருக்காது சுயநலத்திலும் பிறர் நலம் காண தவிக்கும் மனிதாபி நான்;
கண்மூடித்தனமாய் செயல் படுபவன் நீ;
கண்ணியம் காக்க துடிப்பவன் நான்;
கண் இருந்தும் குருடன் நீ;
கண் இல்லாமல் உன்னை கண்காணிக்கும் அகம் நான்;
அழுக்கை சுமக்கும் புறம் நீ;
மாற்றத்தில் தடுமாற்றத்தில் ஏமாற்றத்தை காண்பவன் நீ;
மாற்ற முடியாதவன் நான்;
அடுக்கடுக்காய் பணக்கட்டுகளை சேர்க்க நினைத்து
பாவத்தை அடுக்கிக் கொண்டே போபவன் நீ;
அடம்பிடிக்கும் உன்னை நினைத்து அழுது கொண்டே துடிக்கும் மனம் நான்;
எதிலும் குறை கண்டுபிடிப்பவன் நீ;
எந்த குறையையும் பெரிதாய் நினைப்பவன் நான்;
ஆனவரை ஆதாயம் தேடுபவன் நீ;
அடுத்தவர் மேல் இரக்கம் காட்டுபவன் நான்;
இறக்கும் வரை இன்புற்று இருக்க நினைப்பவன் நீ;
இருக்கும் வரை அமைதியை தேடுபவன் நான்;
ஆம் மனிதா அமைதியை அங்கும் இங்கும் ஓடி தேடுவதை விடுத்து,
உன்னுள் அமைதியைத் தேடு,
உடன்படாத செயலை செய்ய மறுத்திடு;
கண்ணீரால் சோகத்தை கழுவ நினைக்காதே;
கண்டும் காணாமல் போக நினைக்காதே;
கருணை உள்ளத்துடன் பிறர் கண்ணீரையும் துடைக்க துடித்திடு;
ஆகவே மனிதா மன்னியத்தில் கண்ணியத்தை தேடு;
மதிப்பு மிக்க மனிதனாய் இரு;
ஆகையால் நீ மனிதா;
மனித மிருக மாகாமல், மாண்பு மிகு மனிதனாக மாறு;
மறுத்தால் கேடு;
ஆகையால் மனிதா நான் உன்னுள் இருந்து உன்னையே உளவு பார்ப்பேன்.
அ. முத்துவேழப்பன்