ஜன்னலுக்கு வெளியே

வெறுச்சோடிய விழிகள்
வெம்பிக் காணுகிறது
வெளிவுலகை உற்று....

குளுமையான காட்ச்சிகள்
புன்னகையுடன் உலகம்
உற்சாகத்தில் அளவளாவியபடி.....

கம்பிகள் மட்டுமே
தடையாய் இடையே
தடையகற்றிட தவிப்பு.....

புலப்படாத கட்டுகள்
உறவின் பெயரால்
அவிழ்க்க இயலாது
இறுதிவரை.....

சூழ்நிலை கைதியாய்
ஆறுதலடையும் மனது
"இக்கரைக்கு அக்கரை பச்சை"

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Sep-23, 9:15 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 72

மேலே