சீறிப்பாய்ந்திடு
சிற்றிடை அசைந்தாட
நலுங்காமல் நளினமாக
அன்னம் போல்
மென்நடை நடந்த
பெண் ணொருத்தி
போன்ற வர்ணனையில்
மயங்கி மதியிழக்காதே
புதுமைப் பெண்ணே......
கட்டுக்குள் வைத்து
வதைத்து வாட்டிடும்
வல்லூறுகள் வசம்பு
தடவி அலங்கரித்த
தளுக்கு வார்தைகளை
நம்பி நடுவானில்
சிறகின்றி பறந்தால்நீ
வீழ்வது கல்லறைதான்
மதியில்பதி பெண்ணே.......
ஆதியில் அரவணைத்து
வாழ்ந்த அன்பர்களாயிரம்
பேர் இருந்திருக்கலாம்,
இன்றோ சுழலும்தீ
தீய்க்குமுனை திரும்பும்
திசையெல்லாம் அது
உடையவராயினும்
மாற்றவராயினும்
ஒன்றுதான்.....
சிறகை வளர்த்துக்கொள்
தேவையில் சீறிடு
இல்லையேல் புன்னகையில்
புதிர்போடு, புரியாது
புளுங்கட்டும் புல்லுறுவிகள்,
தடம்பிறழாது முன்னேறு
மூவுலகையும் ஆளும்
அறிவைக்கூர் தீட்டிக்கிளம்பு......
நேர்மைப் பிறழாமல்
நீந்திக்கரை சேர்ந்திடு
மற்றவர்க்கும் துடுப்பாயிரு
உன்வழி பின்பற்றிட
ஒவ்வொரு பெண்ணும்
துணிந்திட வேணும்
கரைசேரும் இடம்
சிகரமாக இருக்கட்டும்......
நூற்றாண்டுகள் கடந்தும்
புகழ்ச்சிக்கு மயங்கி
மங்கித் தன்னிலை
மறந்தால் மாற்றமென்பதை
மறந்து மட்க்கிடவேண்டும்
கைப் பாவைகளாக
கள்ளம் புகுந்தோர்க்கு.....
புறத்தோற்றம் விடுத்து
அகத்தினில் மெருகேற்றி
வைரமாய் கடினமுற
காலடியில் புறண்டிடும்
வெற்றி வாகையுன்
சிரமேற தானாகவே
தவமிருந்து, கல்வெட்டாக
பதித்திட்டால் காலமெல்லாம்
பறந்திடலாம் நடுவானில்
சிறகைவிரித்து.....
கவிபாரதீ ✍️