இலங்கு நந்தமிழி லிறைவன்றனைப் பாடினனே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(தேமா கூவிளங்காய் புளிமாங்கனி கூவிளங்காய்)
நலமாய் நாமிருக்க நயந்தேயவன் றாளிணையை
பலநாள் வேண்டிநின்றேன் பலன்றன்னையே காண்கிலனே
சிலநாட் சிந்தனையைச் செறிவாய்த்துணை யாக்கிவைத்தேன்
இலங்கு நந்தமிழி லிறைவன்றனைப் பாடினனே!
- வ.க.கன்னியப்பன்
சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!