இலங்கு நந்தமிழி லிறைவன்றனைப் பாடினனே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(தேமா கூவிளங்காய் புளிமாங்கனி கூவிளங்காய்)

நலமாய் நாமிருக்க நயந்தேயவன் றாளிணையை
பலநாள் வேண்டிநின்றேன் பலன்றன்னையே காண்கிலனே
சிலநாட் சிந்தனையைச் செறிவாய்த்துணை யாக்கிவைத்தேன்
இலங்கு நந்தமிழி லிறைவன்றனைப் பாடினனே!

- வ.க.கன்னியப்பன்

சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-23, 9:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே