அருமையான காதல் கவிதை

💖💓💖💓💖💓💖💓💖💓💖

*காதல் கவிதைகள்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💖💓💖💓💖💓💖💓💖💓💖

என்னவளே !
மருத்துவர் குத்தும்
ஒரு ஊசிக்கே!
வலி தாங்காமல்
துடிதுடித்துப் போவேன்....
இன்று
உன் பெயரை
பச்சைக்குத்த
சொல்லிய போது....
ஊசி மார்பில்
ஓரு நூறு முறை
குத்தி குத்தி எடுக்கப்படுகிறது.....
இப்போதும்
வலி தாங்காமல்
துடிக்கின்றேன்
"உன் பெயரை
ஊசியில்
குத்துகிறோமே" என்று....!!!

💔💔💔💔💔💔💔💔💔💔💔

பெண்ணே!
நீ வாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
கவிதையாகி இருப்பேன்.....

நீ ரசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
சித்திரமாகி இருப்பேன்....

சுவாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
காற்றாகியிருப்பேன்....

வாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
நான் கவிதையாகி இருப்பேன

நேசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
கணவனாகி இருப்பேன்......

நீ வெறுக்கிறேன் என்று
சொல்லிவிட்டாயே |
நான்
'என்னவாக'ப்போகிறேனோ....?

*கவிதை ரசிகன் குமரேசன்*

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-Oct-23, 8:09 pm)
பார்வை : 40

மேலே