எழில்குழலாள் நீராட இன்று வரவில்லை
வழிநடந்(து) ஆற்றோரம் வந்தயிளம் தென்றல்
வழியினி லேசோர்ந்து வாடிய(து) பாவம்
எழில்குழலாள் நீராட இன்றுவர வில்லை
தழுவிட என்செய்வ தோ
---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
எதுகைகள் வழி வழி எழி தழு ---ழி ழி ழி ழு --இரண்டாம் எழுத்து
ஒற்றெழுத்து அல்லது இங்குபோல் உயிர் மெய் எழுத்தால் வரும்
முதலெழுத்து குறிலானால் அனைத்து அடியிலும் குறிலாகவே
வரவேண்டும் நெடிலானால் நெடில்
வழி க்கு வாழி ஒவ்வா எதுகை
1 3 ல் சீர் மோனை : வ வ ,வ வா , எ இ , த தோ (வர்க்க மோனை )
வர்க்க மோனை : த தா தி தீ து தூ தெ தே தோ ---தகர வர்க்கம்
பள்ளி இலக்கணம்