குறும்பு கிருஷ்ணா

குறும்பு கிருஷ்ணா !
…..,…
வாயிலென்ன வெண்ணையா
வையகத்தின் உருவமா /
கையிலென்னக் கலையமா
கோபியரின் துகில்களா /

குழலிலென்ன கீதமா
குவலயத்தின் நாதமா /
மழலவயென்ப தில்லையா
மாயவனின் லீலையா /

அவதரிக்கும் போதெலாம்
அஞ்சுவார்கள் தீயோரே /
தவறிடாதத் தூயவரின்
தவமெல்லாம் நினதருளே /

சூழ்ச்சியெலாம் உந்தனுக்கு
சுகமான அனுபவமோ /
தாழ்ச்சியில்லா கௌரவரின்
துணையானாய் தந்திரமோ /

நல்லோர்கள் நலிந்தாலே
நான்வருவேன் என்றாயே /
போல்லார்க்கும் பொதுவாகப்
புனிதகீதைத் தந்தவனே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (25-Jan-24, 11:07 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 35

மேலே