ஒற்றுமை வேண்டும்

ஒற்றுமை வேண்டும் !
———

சின்னஞ்சிறு கோழிக்குஞ்சே
சிக்கிக் கொண்டாயா /
தன்னந்தனியே வந்ததாலே தவித்துப் போனாயா /

பருவத்தை அடையுமுன்னே
பதற்றமும் எதற்காக /
வருவதையும் உணரந்திடவே
வயதுவர வேண்டாவா /

குழந்தையவள் கரங்களிலே
கொஞ்சிடக் கிடைத்தாயே/
அழுவதற்கு நேரமில்லை
அம்மாவைத் தேடுங்களே /

வெள்ளைநிறமே தூயதுதானே
வேறெதனைத் தேடுகிறீர்கள் /
கொள்ளையழகு உங்களையுமே
கொத்திடவே கழுகிருக்குதே /

குஞ்சுகளின் எதிரியெல்லாம்
கூடி வந்தாலும் /
பிஞ்சுமகள் காத்திடுவாள்
அஞ்சிட வேண்டாம்/

ஒன்றுபட்டு வாழும்போது
ஒன்றும் நடக்காது /
துண்டுபட்டுப் போகும்போது
தொல்லைகள் வரலாறே /

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (25-Jan-24, 11:05 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 44

மேலே