அன்னையின் கரங்கள்
அன்னையின் கரங்கள்.
தாயே உன் கையை கொடு
நான் எழுந்து நிற்பதற்கு
அம்மா இருந்தாள்
என் அருகில்
நான் குழந்தையாக
இருந்த போது
அவள் சேலையை பிடித்து
எழுந்து நிற்பதற்கு
இப்போ எவர் இருக்கிறார்
இந்த கிழவன் அருகில்
தாயே உன் கையை கொடு
நான் எழுந்து நிற்பதற்கு.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.

