அத்திப்பழம் சிவப்பா

அத்திப்பழம் சிவப்பா அத்தைமகள் சிவப்பா !!
——-/

அத்திப்பழம் சிவப்பா
அத்தைமகள் சிவப்பா /
சுத்திசுத்தி வந்தாலும்
சுந்தரிதான் நெருப்பா /

நகரத்திலே வாழ்ந்தாலும்
நாகரிகம் கண்டாலும் /அகத்தினிலே பண்பாடு
அமைதியாக வாழாதோ /

சேலைகளை மாற்றிவிட்டு
சிற்றுடைகள் போட்டாலும் /
காளையவன் பார்த்தாலே
கன்னிநிலம் நோக்குவாளே /

பட்டனத்துப் படிப்புகளும்
பக்குவத்தைச் சொல்லித்தரும் /
கெட்டவரை அடையாளம்
கண்டிடவே உதவிடுமே /

தோற்றமெலாம் அழகில்லை
பாசந்தானே பேரழகு /
நோற்றிடுவேன் தினந்தினமும்
நல்லாளின் கைப்பிடிக்க !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (27-Jan-24, 4:51 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 65

மேலே