குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
மூன்றாவது - வன்புறை.
அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;
அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;
அவை வருமாறு:
அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.
பெருநயப் புரைத்தல்.
தெய்வத்திறம் பேசல்.
பிரியே னென்றல்
பிரிந்து வருகென்றல்.
இடமணித் தென்றல்.
இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.
3 - வன்புறை முற்றிற்று.
நான்காவது – தெளிவு.
ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.
அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;
இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-
செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
பாகனொடு சொல்லல்.
5-பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.
ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்.
அஃதாவது - தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் வருந்துவது.
அது - மருளுற்றுரைத்தல் தெருளுற்றுரைத்தலென இரண்டுவகைப்படும்.
அவை: ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயாமோவென்றல் முதல் கண்படை பெறாது கங்குனோதல் ஈறாகிய ஐந்து விரிகளை யுடையன;
அவை வருமாறு:
ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோவென்றல்.
வாயில்பெற் றுய்தல்.
(இ-ள்) தலைவி உயிர்ப் பாங்கி முகத்தை நோக்கிச் செல்லுதலைப் பார்த்துத் தலைவன் அப்பாங்கியைத் தூதாகப் பெற்று உய்வதாகக் கூறுதல். பாங்கி - பக்கத்திலிருக்கும் உயிர்த் துணைவி.
கட்டளைக் கலித்துறை
(’ய்’ இடையின ஆசு)
அம்மான் முகமரைக் கும்மதி மீதுக்கு மாதரிக்கு
மிம்மான் விழிவண்டு மானுஞ்சென் றேறு மெடுத்தொரம்பாற்
பொ’ய்’ம்மானை யெய்த குலோத்துங்க சோழன் புகார்வரைவா
யு’ய்’ம்மா நலமொன்று கண்டுகொண் டேன்களிப் புள்ள(த்)திலே! 33