குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

மூன்றாவது - வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;

அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;

அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;

அவை வருமாறு:

அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.

பெருநயப் புரைத்தல்.

தெய்வத்திறம் பேசல்.

பிரியே னென்றல்

பிரிந்து வருகென்றல்.

இடமணித் தென்றல்.

இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.

3 - வன்புறை முற்றிற்று.

நான்காவது – தெளிவு.

ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.

அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;

இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-

செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.

பாகனொடு சொல்லல்.

5-பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.

ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்.

அஃதாவது - தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் வருந்துவது.

அது - மருளுற்றுரைத்தல் தெருளுற்றுரைத்தலென இரண்டுவகைப்படும்.

அவை: ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயாமோவென்றல் முதல் கண்படை பெறாது கங்குனோதல் ஈறாகிய ஐந்து விரிகளை யுடையன;

அவை வருமாறு:

ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோவென்றல்.

(இ-ள்) தலைவியைப் பிரிந்த மாதர்கூட்டம் வந்து வழிபடுதலைக் கண்டு இம்மாதர் கூட்டத்துள்ளாளென்னைத் தனித்துக் கூடியது என்ன மாயமோ? வென்று தலைவன் மயங்கிக் கூறுதல்.

கட்டளைக் கலித்துறை

விம்மாய துன்பத்துக் கண்மாய வெள்ளத்தை மீட்கநெஞ்சே
தம்மாய வெள்ளந் தணந்திங்ங னேதச மாமுகனைக்
கம்மாய வெய்த குலோத்துங்க சோழன்கல் யாணியன்னா
ரெம்மாய மோகன வோமனம் போனமக் கெய்தியதே! 32

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (12-Apr-24, 5:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே