நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

அரசுப்பள்ளியில் அரைகுறை
ஆங்கிலம் கற்றதால் தவிப்பு - இருந்தும்
அயல்நாட்டு நிறுவனத்தில்
அதிகாரபதவியின் நினைப்பு!

பத்துபேர் முன்னிலையில்
பந்தயம்கட்டி பேசுஎன்றாலும்
பல்லும், வாயும் சட்டென்று
பசைத்தடவி ஒட்டிக்கொள்ளும்!

முதிர்ந்த தகப்பனின்
மூட்டைசுமை இறக்கிட
முயன்று மூச்சிரைத்து
முட்டிமுட்டி கற்கின்றேன்

நேர்முக தேர்வொன்றில்
நெருக்கிடும் போட்டியில்
நேர்மை வெற்றிவந்தால்
நேராகிவிடும் குடும்பகணக்கு

நினைத்திடும் என்நினைப்பு
நிறைவேற்றி தருகவென்று
நித்தமும் ஆண்டவனை
நெஞ்சார தொழுகின்றேன்

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (2-Sep-24, 11:52 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 63

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே