வாசல் திறக்கும்
வாசல் திறக்கும்.
10 / 10 / 2024
விழிகள் விழித்திருந்தாலும் - ஆந்தைக்கு
விழியில் பார்வை இருக்காது பகலில்
கடலில் மூழ்கும்போது மனிதருக்கு
பார்வையும் மங்கிப் போகும் நீரில்
காதல் கடலில் முழ்கும்போதோ
நடப்பது வேறாய் வியக்க வைக்கும்.
விழியின் வேலை கரங்கள் பெற்று
தொட்ட பொழுதில் ஆயிரம் விழிகள்
திறந்தே பார்வையும் கூர்மைபெற்று
ஸ்பரிச உணர்வில் ஆயிர மின்னல்
வெளிச்சம் பாய்ந்து நீரிலும் வியர்த்து
அங்கு சொர்க்க வாசல் திறக்கும்.