நன்மதி வெண்பா - நூல் - பாடல் 81
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
அளவிறிரு விற்குயிரோர் ஆயிழைபே ரூர்க்கு
வளவணிகன் இன்னுயிராம் வாய்த்த - களமத்தின்
ஆருயிர்நீர் உம்பற் கருந்துதிக்கை சீவனாய்
வாருமென நன்மதியே யாய்! 81