குலோத்துங்க சோழன் கோவை - நூல் - பாங்கி தலைவி யருமை சாற்றல்- பாடல் 108

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன;

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

ஒன்பதாவது - பாங்கிமதி யுடன்பாடு.

அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்;

அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்ட முண்மையறிதல்;

அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடல் என மூன்றாம்;

அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்;

குறையுறவுணர்தல்.

அஃதாவது-தலைவன் தழைமுதலியவற்றைக் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல்.

இருவரும் உளவழியவன் வரவுணர்தல்

அஃதாவது-தலைவியுந் தானும் ஒருங்கிருந்த விடத்தில் தலைவன் றனிவரப் பாங்கிகண்டு அதனானே கலப்புண்மை யறிதல், அதன்விரி வருமாறு:-

கையுறை யேந்திவருதல்.

புனங்கண்டு மகிழ்தல்.

இருவரும் உளவழிச்சேறல்.

தலைவன் அவ்வகை வினாதல்.

எதிர்மொழி கொடுத்தல்.

இறைவனை நகுதல்.

(இ-ள்) தலைவனப்பாற் சென்றானாகப் பாங்கி தலைவியை நோக்கி அசதியாடல்.

அசதியாடல் - சிரித்துப் பேசுதல்.

இதுவுமது.

பாங்கி மதியி னவரவர் மனக்கருத்துணர்தல்.

(இ-ள்) பாங்கி தன்னறிவால் தலைவன் தலைவியென்ற இருவர் மனக்குறிப்பை யாராய்தல்.

இதுவுமது.
பத்தாவது- பாங்கியிற்கூட்டம்.

அஃதாவது-பாங்கியாற்கூட்டுவிக்கத் தலைவன் தலைவியைக் கூடுங் கூட்டம், அஃது – இரந்துபின்னிற்றல் சேட்படை மடற்கூற்று மடல் விலக்கு உடன்படல் மடற்கூற்றொழிதல் குறைநயப்பித்தல் நயத்தல் கூட்டல் கூடல் ஆயங்கூட்டல் வேட்டல் எனப் பன்னிரண்டு வகையினையுடைத்து; அவை வருமாறு:-

தலைவ னுட்கோள்சாற்றல்.

பாங்கி குலமுறைத்தல்.

தலைவன் றலைவிதன்னை யுயர்த்தல்.

(இ-ள்) தலைவன் தலைவியை யுயர்த்திக் கூறுதல்.

இதுவுமது.

பாங்கி யறியாள் போன்று வினாதல்.

இறையோனிறைவி தன்மையியம்பல்.

பாங்கி தலைவி யருமைசாற்றல்.

(இ-ள்.) தலைவி கிடைத்தற்கரியளென்று பாங்கிகூறுதல்.

கட்டளைக் கலித்துறை

மாமேருப் பொன்னு மலயா சலச்சந்தும் வானமுதுங்
காமேன் மலர்க்குல மும்மெளி தாயினுங் காரரக்கர்
கோமேதை பேய்க்கிடும் வில்லான் குலோத்துங்கன் கோழிவெற்பா
யாமேயிவ் வண்ணஞ் சொலற்கரி தாமெங்க ளேந்திழைக்கே! 108

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (27-Feb-25, 4:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1

மேலே