படம்

படம்.

நான் எடுத்த
படம் அது
நான் எனக்காக
எடுத்த படம் அது.

அதில்
மலைகள் இல்லை
மரங்கள் இல்லை
ஆறு இல்லை
கடல் இல்லை
நிலாவும் இல்லை

அதில்
நகைகள் இல்லை
பட்டு சேலை இல்லை
பங்களோ இல்லை
கார் இல்லை

அதில்
அவள் இருந்தாள்
அழகிய கண்களுடன்
அழகிய புன்னகையுடன்
இன்று காலை விரிந்த
மலரென.

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (5-Apr-25, 7:21 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : PADAM
பார்வை : 27

மேலே