தலைக் கவசம்
தலைக் கவசம்
கந்தலுக்கு
கவரிங் கலைகூடம்
அடிபணிய
கருங்கூந்தலுக்கு
எடுப்பாக நெத்தியிலே
வார்த்தெடுத்த வெள்ளை
முப்புள்ளி சொன்னது
புதுக் கவிதை………….
இவனுக்கு
சிகை அலங்காரம்
தேவையில்லை !
இப்போ……
எல்லையில் சித்தாந்தம் பேச
தலைக் கவசம் தேவை….
ஆதலால் கையில்
வைத்திருக்கும் சீப்பு
வழுக்கை தலையின்
பின்னனி சுயசரிதையை
கவசம் கண்காணிக்கிறது…..
வறுமையின் வாரிசு
நிறம் மாறதிருக்க
அனுபவம் கண்ணாடியில்
நிழாலாய் ஜொலிக்க
வந்ததை வந்தவாறு
குறி சொல்லிட….
மரத்தடி மகத்துவம்
கற்பித்த பாடம்
இன்று அளிக்கிறது அமுது
மூவேளை முன் வந்து !