தாய் மொழியை இழக்கும் தலைமுறையே
அயல்மொழி விரும்பும் தலைமுறையே
அறிந்திடு தாய்மொழி பெருமையினை
அறம்செய விரும்பு எனக்கூறும்
அன்னை மொழியை பழிக்காதே
பேசிடும் வார்த்தையில் அன்றாடம்
பிறமொழி கலந்து பேசுவதில்
பெருமை உண்டா நீயோசி
பேர்தரும் தமிழை தினம்வாசி
மொழிதான் மனிதனின் அடையாளம்
பழிசொல்லி போடாதே கடிவாளம்
இருவிழி நிகர்த்த இன்தமிழை
இணையமும் ஏற்று இயங்கிடுதே
செந்தமிழ் பேசிடும் மானிடர்க்கு
சொர்க்கத்தில் என்றும் இடமுண்டு
முத்தமிழ் வழியில் வாழ்ந்தாலே
முக்தியும் கிட்டுமுன் மனம்கண்டு
போனது போகட்டும் விட்டுவிடு
பொன்மொழி தமிழை நாளும்தொழு
தனம்தரும் தமிழை தினம்ஓதி
தரணியில் வகுப்போம் புதுநீதி.
சொ. பாஸ்கரன்