வரலாறு படைபோம் வாதமிழா
வாவா தமிழா வலிவோடு – இங்கு
வரலாறு படைத்திட பொலிவோடு
தள்ளாடும் தமிழகம் நிலைபெறவே – இந்த
தரணியில் உயர்ந்து கலையுறவே
சிறகுகள் உனக்குண்டு மறவாதே – அதை
சிகரத்தைத் தொடும்வரை சுருக்காதே
சொர்க்கத்தை அட்டைந்திட நினைத்தாலே – அது
சொற்ப தூரத்தில் கிடைக்காது
தேய்ந்திடும் சந்தனம் மணம்தருமே – உன்
தேகத்தை வளைத்திட களம்வருமே
சோர்ந்து விடாதே முடியும்வரை – வரும்
சோகங்கள் கரைந்திடும் வியர்வையிலே
தினமொரு வலிகள் உனைத்தீண்டும் – உன்
மனதின் வலிவால் அதைத்தாண்டு
பழைமைக்கு இன்றே பாடைகட்டு – வரும்
புதுமையில் அமைத்திடு படிக்கட்டு
விரையங்கள் பற்பல வந்தாலும் – அது
கரைந்திடும் காலத்தில் கலங்காதே
உரமனம் உனக்குண்டு மயங்காதே – அது
வரலாறு பெரும்வை உறங்காதே.
சொ. பாஸ்கரன்