நெசவு

மலைவாழ் மக்கள் வாழும் சிற்றூரில்:


ஏண்டி அக்கி உன்ற பேரனுக்கு என்ன பேரு


வச்சிருக்கிறாங்க?


@@@@@@@


என்ற பேரன் பொறந்த பிறகு அரசாங்கம்


கொடுத்த தொலைக்காட்சி பொட்டில


காட்டறதை எல்லாம் என்ற மவன் மூணு


நாளு உடாம பாத்தான்.

@@@@

எதுக்குடி மூணு நாளுப் பாத்தான்?

@@@@@@


அவம் பையனுக்கு வைக்க ஒரு இந்திப்


பேரைத் தெரிஞ்சிக்கத்தான்.


@@@@@@@@@


அவனுக்குப் பிடிச்ச இந்திப் பேரு


கெடச்சுதா?

@@@@@@

ஆமாண்டி. கெடச்சுது. பேரு 'கேசவு'ன்னு

(கேஷவ்)


சொன்னான்.


@@@@@@@


கேசவு. நம்ம ஊரில இல்லாத பேரு.


அடுத்த கொழந்தையும் பையனாப்


பொறந்தா அந்தக் கொழந்தைக்கு


'நெசவு'ன்னு பேரு வச்சாலும் வச்சுருவான்


உன்ற மவன்.

@@@@@@

நெசவு நம்ம ஊரில் நடக்கிற தொழில்.

@@@@@@

கேசவு என்ன தொழில் எந்த ஊர்ல


நடக்கற தொழிலோ? நாம என்னத்தக்

கண்டோம்.

@@@@@@@

ஆமாம். ஆமாம். நாம என்னத்தக்

கண்டோம்.

எழுதியவர் : மலர் (13-Jun-25, 7:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 12

மேலே