தம்மொளி வேண்டுவார் நோக்கார் - ஆசாரக் கோவை 51

இன்னிசை சிந்தியல் வெண்பா

மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமுந்
தம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று! 51

- ஆசாரக் கோவை

பொருளுரை:

தம் கண்ணின் ஒளியும், புகழும் கெடாமல் இருக்க விரும்புவோர் மின்னலின் ஒளியையும், விழுகின்ற எரிநட்சத்திரத்தையும், வேசியரது ஒப்பனையையும் பாரார்,

பகலுக்குரியோனான ஞாயிற்றினது காலை யொளியும், மாலை யொளியும் அங்ஙனமே பார்க்கத் தகாதனவாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-25, 12:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே