என் தோழியின் வரவேற்பு

ஏக்கங்கள் என் நெஞ்சில்
உன்னை காணாத பொழுது.
ஏனென்று என்னை கேட்காதே
ஏனெனில்
எனக்கு சொல்லவும் தெரியாது
சொன்னாலும்
உனக்கது புரியாது
சொல்லி புரிய இது
காதலுமில்லை
தெரிந்து புரிய அது
ஆழ் நட்புமில்லை
நடுகடலில்
நடுநிசியில்
நான் தத்தளிக்கவுமில்லை
கலங்கரை ஒளியாய் நீ என்னை
காக்கவும் இல்லை
நீ என் தாய்
நான் உன் சேய் என
நான் உன்னை கெஞ்சவும் இல்லை
நீ என் மகன் என கொஞ்சவும் இல்லை
இருந்தாலும் நீ எனக்கு
செல்லமடி
நான் உனக்கு புதுவரவு -என்றும்
நீ எனக்கு நல்லவரவு ...